/* */

சரக்கு வேனில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

வேலூர் அருகே வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்த இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர், டிரைவர் தப்பியோட்டம்

HIGHLIGHTS

சரக்கு வேனில் கடத்தி வந்த குட்கா பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட வேன்

பெங்களுரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்குள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த வேனை நிறுத்த முயன்றபோது, வேன் டிரைவர் வேனை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வேனில் சோதனை செய்தபோது, வேனில் தவிடு மூட்டைகளுக்கு அடியில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது

வேனில் இருந்தவர்களை கைது செய்து விசாரித்ததில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் (வயது 22), செட்டி பள்ளியை சேர்ந்த வேல்முருகன்(24) என தெரியவந்தது.

கைப்பற்றிய குட்காவின் மதிப்பு சுமார் 5 லட்சம் என்றும்,பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Updated On: 15 May 2022 7:42 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  7. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  9. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?