/* */

அணைக்கட்டு அருகே கல்லுட்டை கிராமத்தில் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை

அணைக்கட்டு அருகே பல ஆண்டுகளாக ஆற்றுக்கால்வாய் தண்ணீரில் இறங்கி சடலத்தை தூக்கி செல்வதால் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை

HIGHLIGHTS

அணைக்கட்டு அருகே கல்லுட்டை கிராமத்தில் கால்வாயில் பாலம் அமைக்க கோரிக்கை
X

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் அடுத்த கல்லுட்டை கிராமத்தில் 100 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் . இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் உத்திரகாவேரி ஆற்றின் கால்வாயை கடந்து சேர்ப்பாடி ஆற்றங்கரையோரமுள்ள மயானத்தில் அடக்கம் செய்து வருகின்றனர் .

கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக உத்தர காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கால்வாய் அதிகளவு தண்ணீர் செல்கிறது . இதனால் அங்கு வசிக்கும் மக்கள் ஆற்றுக் கால்வாயை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . கால்வாயில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே தேங்கியுள்ள அதிகளவு தண்ணீரில் இறங்கி ஆபத்தான நிலையில் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கல்லுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி பட்டம்மாள் ( 90 ) என்பவர் வயது மூப்பால் இறந்தார் . அவரது சடலத்தை மாலை மயானத்திற்கு தூக்கிச்சென்றனர் . அப்போது , உத்திரகாவேரி ஆற்றுக் கால்வாயில் தேங்கியுள்ள மார்பளவு தண்ணீரில் இறங்கி சேறும், சகதியில் சிக்கி இறங்கி ஆபத்தான நிலையில் சடலத்தை தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைக்காலங்களில் ஆற்றுக்கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, ஊரில் இறந்தவர்களின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். ஆபத்தான நிலையில் கால்வாயை கடந்து செல்லவேண்டியுள்ளது . பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் விதமாக கால்வாயில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  2. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  3. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  4. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  5. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  6. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  7. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  8. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்