/* */

பள்ளிகொண்டா பகுதியில் மணல் திருட்டை தடுக்க ராட்சத பள்ளம்

பள்ளிகொண்டா பகுதியில் மணல் கடத்தும் முக்கிய பாதைகளின் நடுவே சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வழியை மூடியுள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளிகொண்டா பகுதியில் மணல் திருட்டை தடுக்க ராட்சத பள்ளம்
X

மணல் கடத்தலை தடுக்க சாலையில் தோண்டப்படும் பள்ளம்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளான இறைவன்காடு, கந்தனேரி, வெட்டுவானம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலாற்றுப் படுகையிலிருந்து மணல் கடத்தப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் பாலாற்றில் கரைபுரண்டுவெள்ளம் ஓடியது. தற்போது வெள்ளம் குறைந்து விட்டதால் கரையோரங்களில் மணல் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பள்ளிகொண்டா காவல்துறையினர், மணல் கடத்தும் முக்கிய பாதைகளின் நடுவே சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வழியை மூடியுள்ளனர்.

இது குறித்து காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி கூறுகையில் தற்போது பாலாற்றில் வெள்ளம் குறைந்துவிட்டதால் மணல் கொள்ளையர்கள் முக்கிய பாதைகள் வழியாக மணல் கடத்துவதை தடுக்க ஆங்காங்கே மணல் கடத்தும் பாதைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி இருப்பதாக தெரிவித்தார்.

Updated On: 12 March 2022 3:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது