/* */

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி காவல் நிலையம் முற்றுகை

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்.

HIGHLIGHTS

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி காவல் நிலையம் முற்றுகை
X

மாயமான இளம்பெண்ணை மீட்டுத்தர கோரி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

அணைக்கட்டை அடுத்த மலைக் கிராமமான வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 36) என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீ்ட்டில் இருந்து வெளியில் சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோர் அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதில், கிருஷ்ணமூர்த்தி என்பவர் எனது மகளின் மனதை மாற்றி கடத்தி சென்று எங்கேயோ மறைத்து வைத்துள்ளார். எனது மகளை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறோம், எனத் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வந்தனர். ஆனால் அவரை காணவில்லை.

இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் என 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது மலைவாழ் மக்கள், காணாமல் போன இளம்பெண்ணை விரைவில் மீட்டுத்தரக் கோரி போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Jun 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது