/* */

பாஜவுடன் கூட்டணியால் தேர்தலில் தோல்வி: அதிமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு

வேலூர், ஊசூரில் நடந்த அதிமுக ஆலோசனை கூட் டத்தில், பாஜவுடன் கூட் டணி வைத்ததால் தேர்தலில் தோல்வியடைந்தோம் என நிர்வாகிகள் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

பாஜவுடன் கூட்டணியால் தேர்தலில் தோல்வி: அதிமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு
X

ஊசூரில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்ட மன்ற தொகுதி வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஊசூரில் நடந்தது .

புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் . கூட்டத்தில் , உள்ளாட்சி தேர்தலுக்கு நிர்வாகிகள் இப்போதே தயாராக வேண்டும் , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி நிர்வாகிகள் கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்களிடம் தொலைபேசி உள்ளிட்டவைகள் மூலம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பன பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .

முடிவில் நன்றி உரை கூறி முடிக்கும் போது கட்சி நிர்வாகிகள் சிலர் அவர்களுடைய குறைகளை முன் வைத்து பேசினர் . அப்போது , பலர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் காரணமாகவே கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடைந்தோம் . வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சி மேலிடம் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றனர் .

இதையே பலரும் சரி என கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது . பின்னர் அவர்களை மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சமரசம் செய்தனர் .

Updated On: 14 July 2021 1:21 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...