/* */

ஆரவாரத்துடன் நடைபெற்ற எருதுவிடும் விழா

ஆரவாரத்துடன் நடைபெற்ற எருதுவிடும் விழா
X

வேலுார் மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் ஆரவாரத்துடன் எருதுவிடும் விழா நடைபெற்றது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழா நடைபெறுவது வழக்கம். வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 82 கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் முதல் நாளான இன்று அணைகட்டில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறைந்த கால அளவில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை ஓடி கடக்கும் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் எருதுவிடும் விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். மேலும் காவல்துறை பாதுகாப்பும், மாட்டு உரிமையாளர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 15 Jan 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!