/* */

வேலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

வேலூர் மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கலின் போது அசம்பாவிதங்களை தவிர்க்க சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

HIGHLIGHTS

வேலூர் மாவட்டத்தில்  பாதுகாப்பு பணியில் 400 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
X

சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் வரும் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் துவங்கும் வேட்பு மனு தாக்கலின் போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக சுமார் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள், குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் 57 கவுன்சிலர்கள், பென்னாத்தூர், திருவலம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா ஆகிய பேரூராட்சிகளில் 63 கவுன்சிலர்கள் என்று மொத்தம் 180 வார்டு கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

மாவட்டத்தில் இன்றுவேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. வேலூர் மாநகராட்சி பகுதியில் காணப்பட்ட அரசியல் கட்சியின் கொடி, அரசியல் கட்சி பிரமுகர்களின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் மற்றும் பேனர் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண் 18004254464 தொடர்பு கொள்ளலாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உட்பட 6 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் 1,99,208 ஆண் வாக்காளர்களும் 2,15,001 பெண் வாக்காளர்களும், 46 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4,14,255 வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 5,94,595 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

வேட்புமனு தாக்கலின்போது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 28 Jan 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  3. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  4. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  5. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  9. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...