/* */

தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில் 22.33 லட்சம் பேர் பயன்

தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற ஆறாவது கோவிட் மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 22,33,219 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தமிழகத்தில் இன்றைய மெகா தடுப்பூசி முகாமில்  22.33 லட்சம் பேர் பயன்
X

பைல் படம்.

தமிழகம் முழுவதும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சனிக்கிழமைகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி இன்று மாநிலம் முழுவதும் 6வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதில் வழக்கத்தை விட பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசிகளை போட்டுக்கொண்டனர். பல இடங்களில் பரிசுப் பொருட்களும் குலுக்கல் முறையில் அறிவிக்கப்பட்டன.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற ஆறாவது கொரோனா மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 22,33,219 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதில் முதல் தவணையாக 8,67,573 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 13,65,646 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 23 Oct 2021 5:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!