/* */

பிப்ரவரி 1ம் தேதி முதல் புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை.

பிப்ரவரி 1 முதல் ரயில் பயணிகள் பயணச் சீட்டு பெற கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தர தேவையில்லை என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பிப்ரவரி 1ம் தேதி முதல் புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை.
X

தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும் பரவலை கட்டுப்படுத்த பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தென்னக ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயிலில் பயணிக்கும் நபர்கள் மாதாந்திர பயணச்சீட்டு, ஒரு முறை பெறும் பயணச்சீட்டு ஆகியவை பெறும்போது இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்களை காட்டி பயணச்சீட்டு பெற வேண்டும் என உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் பரவல் குறைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்தியதை தொடர்ந்து தென்னக ரயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை எனவும், சமூக இடைவெளி, முககவசம் உள்ளிட்ட மத்திய , மாநில அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Updated On: 28 Jan 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!