/* */

காசநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்: உருவாக்கும் முயற்சியில் ஐஐடி மெட்ராஸ்

சிறுநீரை அடிப்படையாகக் கொண்ட காசநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ் புதிதாக உருவாக்க உள்ளது.

HIGHLIGHTS

காசநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம்: உருவாக்கும் முயற்சியில் ஐஐடி மெட்ராஸ்
X

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), பொதுத்துறை நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re)-வுடன் இணைந்து, சிறுநீர் அடிப்படையிலான காசநோய் கண்டறிதல் அல்லது பரிசோதனையை உருவாக்க உள்ளது.

பல்வேறு நோய்களைக் கண்டறிய தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரத்த குளுக்கோஸ் மானிட்டர்கள் போன்ற; பாயிண்ட் ஆப் கேர்; கருவிகளைக் காட்டிலும், புதிதாக உருவாக்கப்பட உள்ள சிறுநீர் அடிப்படையிலான காசநோய் பரிசோதனைக் கருவி விரைவாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-வின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியில் இருந்து செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் மத்திய- மாநில அரசுகளின் சுகாதாரத் துறைகளும் முதன்மை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை சுகாதார மையங்களும் பயன்பெறும்.

இந்த கூட்டுமுயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (GIC Re) இயக்குநரும் பொதுமேலாளருமான மதுலிகா பாஸ்கர் ஆகியோர் கடந்த 10 பிப்ரவரி 2023 அன்று கையெழுத்திட்டனர். பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின் கீழ் 180-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தற்போது வரை ரூ.250 கோடி திரட்டப்பட்டு உள்ளது. இதனைக் கொண்டு 200- க்கும் அதிகமான கூட்டு முயற்சித் திட்டங்களில் ஐஐடி மெட்ராஸ் ஈடுபட்டுள்ளது.

சமூகப் பயன்பாட்டுடன் கூடிய இத்திட்டத்திற்கு உதவும்; ஜிஐசிரீ; நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறுகையில், காசநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியும் முக்கியமான இத்திட்டத்தில் ஜிஐசி எங்களுடன் கூட்டுச் சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் மிகப் பரவலான தொற்றுநோய்களில் ஒன்றான காசநோய்க்கு 2025-ம் ஆண்டுக்குள் முற்றுப்புள்ளி வைக்க (End TB) இந்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. இருப்பினும், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்த முயற்சிகள் தடைபட்டுள்ளன. காசநோய் பரவாமல் கட்டுப்படுத்த அதனை சரியான நேரத்தில், விரைவான மற்றும் அணுகக் கூடிய முறையில் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஜென்எக்ஸ்பர்ட் (GeneXpert), செல்வளர்ப்பு போன்ற தற்போதைய நுட்பங்களைப் பொருத்தவரை அவை வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பைக் கொண்டவை. தவிர கூடுதல் செலவு பிடிப்பதுடன், பரிசோதனைக்கு ஒருவாரமோ அல்லது இரு வாரங்களோ ஆகின்றன.

விரைவான, உணர்திறன் மிக்க இந்த பரிசோதனை முறையின் வாயிலாக, சந்தேகத்திற்கு இடமான நோயாளிகளில் உண்மையாகவே பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களை விரைவாகக் கண்டறிவதுடன் உரிய நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளித்து நோயைக் கட்டுப்படுத்த முடியும். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண; ஜிஐசி ரி; நிறுவனத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும்

இத்திட்டத்தில், ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் வி.வி.ராகவேந்திர சாய் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஒத்துழைப்பு குறித்து ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப்இந்தியா (ஜிஐசி ரி) இயக்குநர் மற்றும் பொது மேலாளர் திருமதி மதுலிகா பாஸ்கர் கூறுகையில், தொழில்நுட்பத்தில் புதுமை, வளர்ச்சியை ஊக்குவிக்க தொழில் மற்றும் கல்வித் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அவசியமாகும். கார்ப்பரேட்டுகள், வணிக நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதால் நிதியுதவி கிடைப்பதுடன், தங்கள் ஆராய்ச்சிப் பணிகளையும் விரிவுபடுத்த முடியும்.

ஜிஐசி-யைப் பொருத்தவரை, கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த இரு முக்கிய கருப்பொருள்களை உள்ளடக்கிய அர்த்தமுள்ள முன்முயற்சியில் ஐஐடி மெட்ராஸ்-உடன் கூட்டுச் சேர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் எனக் குறிப்பிட்டார்.

புதுமையான பிளாஸ்மோனிக் ஃபைபர் ஆப்டிக் பயோசென்சார் (P-FA8) தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள பயோசென்சார்ஸ் ஆய்வகத்தில் உருவாக்கி வருகின்றனர். சிறுநீரில் உள்ள காசநோய் உயிரியலைக் கண்டறிவதற்கான ஆய்வக அளவிலான கருத்து ஆதாரத்தை அவர்கள் நிறுவியுள்ளனர். lipoarabinomannan (LAM) என்றழைக்கப்படும் இந்த ஆய்வின் முடிவுகள் புகழ்பெற்ற பயோசென்சார்ஸ் அண்ட் பயோஎலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி இதழில் கட்டுரையாக வெளிவந்துள்ளது.

இவற்றுடன், ஃபைபர் ஆப்டிக் சென்சார் ஆய்வுகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த தொழில்நுட்பம் இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள இரு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. சிறுநீர் அடிப்படையில் காசநோயைக் கண்டறிய அடுத்தகட்ட நடவடிக்கையாக, காசநோய் பாதித்த நோயாளியின் மாதிரிகள் மூலம் P-FAB-ஐக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் முறையான மருத்துவ சரிபார்ப்பு ஆய்வி மேற்கொள்ளப்பட இருக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் (PHCs) இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் எளிதாக்குவதுதான் ஆராய்ச்சித் திட்டத்தின் தற்போதைய முக்கியமான பணியாகும்.

சிறுநீர் அடிப்படையில் காசநோய் பரிசோதனை/நோய் கண்டறிதல் என்ற கருத்து ஆதாரத்தை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கும். ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும், நோய்கண்டறியும் கருவி உற்பத்தியாளர்களுக்கும் உரிய தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பைபர் ஆப்டிக் சென்சார் ப்ரோப் ஃபேப்ரிகேஷன், ஆப்டோ எலக்ட்ரானிக் ரீட்அவுட் சாதனங்களுக்கான தொழில்நுட்பங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் ஏற்கனவே காப்புரிமை பெற்றுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு விண்ணப்பங்களின் அடிப்படையில் தனித்தனியாக அறிவுசார் சொத்துரிமைக்கான உரிமங்கள் வழங்கப்படும்.

மருத்துவ பரிசோதனைக்கான கருத்து ஆதாரத்தை நிறுவ இந்த ஆராய்ச்சித் திட்டம் உதவிகரமாக இருக்கும். உரிய தொழில்துறையினரின் கூட்டாண்மை உதவியுடன், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த தயாரிப்பு பரந்த அளவில் பயன்படுத்தும் வகையில் தயாராகிவிடும்.

Updated On: 22 Feb 2023 2:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.