திருச்சி கோர்ட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து
திருச்சி கோர்ட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது.
HIGHLIGHTS
கடந்த 3-9-2018 அன்று தி.மு.க. தலைவரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் திருச்சி முக்கொம்பில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் கதவணை உடைந்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக திறமையற்ற ஆட்சி தான் காரணம் என அப்போது முதல்வராக இருந்தவர் மீது குற்றம் சாட்டி பேசியதாக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு ஐகோர்ட்டு ஒப்புதல் வழங்கியது.
இதனைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு இன்று திருச்சி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆஜர் ஆனார்.ஸ்டாலின் தரப்பில் தி.மு.க. மூத்த வழக்கறிஞர் ஓம்பிரகாஷ் ஆஜராகி வாதாடினார். ஐகோர்ட்டு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிபதி கே.பாபு உத்தரவிட்டார்