/* */

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: 621 பணியிடங்களுக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இன்று எழுத்து தேர்வு நடை பெற்றது.

HIGHLIGHTS

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு:  621 பணியிடங்களுக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போட்டி
X

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் இன்று எழுத்து தேர்வு நடை பெற்றது.

இது தொடர்பான அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்பு தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. இதையடுத்து இளைஞர்களும், இளம் பெண்களும் தேர்வு எழுத, அந்த தேர்வு வாரிய இணையத்தளம் மூலம் விண்ணப்பித்தனர்.

இதில் தகுதியுடையவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு மட்டும் தேர்வு கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. 1,45,804 இளைஞர்கள், 40,885 பெண்கள், 33 திருநங்கைகள் என மொத்தம் 1,86,722 பேர் எழுதவும் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறையைச் சார்ந்த விண்ணப்பதாரர்களில் 13,609 ஆண் காவலர்கள், 2,401 பெண் காவலர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 16,011 பேருக்கும் நுழைவுச் சீட்டு வழங்கப் பட்டிருந்தது.

எழுத்து தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 45 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுதுவதற்கு 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பிரதான எழுத்து தேர்வு நடைபெற்றது. மாலை 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும் நடைபெறுகிறது.

காவல்துறையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இன்று மாலை 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதி தேர்வும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரையில் பிரதான எழுத்து தேர்வும் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய அதிகாரிகளும், அந்தந்த மாநகர, மாவட்ட காவல் துறை அதிகாரிகளும் இன்று தேர்வு நடந்த இடங்களில் தீவிரமாக கண்காணித்தனர். சென்னையில் அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் தேர்வை எழுதினர். தேர்வு மையத்துக்குள் சென்றவர்கள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

ஆண், பெண்களுக்கு தனித்தனி தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 621 பணியிடங்களுக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதி இருப்பதால் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.

Updated On: 26 Aug 2023 1:41 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!