குரூப் 2 தேர்வு: முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து வர தடை

குரூப் 2 தேர்வு: முகக்கவசம் கட்டாயம், ஸ்மார்ட் வாட்ச் அணிந்து வர தடை
X
குரூப் 2 தேர்வின் போது தேர்வு எழுதுவோர் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றுஅரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்த ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வாணையம் இன்று வெளியிட்டு இருந்தது.

இது தொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்ச்களை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!