தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும்-தலைமை காஜி

தமிழ்நாட்டில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் இன்று நோன்பு தொடங்கிய நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்குகிறது
ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இதற்கானபிறை தெரியும் நாளில், நோன்பு தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.
இந்நிலையில், நாளை (ஏப்.03)முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏப்.02-ம் தேதி மாலை ரமலான் மாத பிறை காணப்படவில்லை ஆகையால் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.02 ) அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா, ஆப்கான், குவைத், ஈராக்கில் பிறை காட்சியளித்ததையடுத்து. உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று முதல் ரமலான் நோன்பைத் தொடங்கினர். வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் ரமலான் நோன்பு தொடங்குகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu