/* */

மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக பட்ஜெட், மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று, சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
X

இது குறித்து, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, நடப்பு 2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை, மார்ச் 18 ஆம் தேதி காலை 10, மணிக்கு தாக்கல் செய்யப்படும். அதற்கு அடுத்த நாள், மார்ச் 19ம் தேதி, வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.

நடப்பு 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், காகிதமில்லாததாக இருக்கும். இதனை, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை அரங்கில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று, சபாநாயகர் அப்பாவு மேலும் தெரிவித்தார்.

பட்ஜெட் உரை நேரலை செய்யப்படும்; கொரோனா விதிகளை பின்பற்றி கூட்டத் தொடர் நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18 ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று, சபாநாயகர் அப்பாவு மேலும் கூறினார்.

Updated On: 8 March 2022 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு