Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் விதிமுறைகளை மீறிய வாகனங்கள் பறிமுதல்
திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக 262 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் எஸ்பி அரவிந்தன் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், 3 பேர் பயணித்தல் உள்ளிட்ட அத்துமீறல்களால் 741 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 262 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.