/* */

விடுமுறை நாளில் பணி; 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

No Holiday - திருப்பூர் மாவட்டத்தில், சுதந்திர தின விடுமுறை நாளில், தொழிலாளர்களை பணியமர்த்திய 72 நிறுவனங்கள் ஆய்வில் பிடிபட்டது.

HIGHLIGHTS

No Holiday | Working Holiday
X

திருப்பூர் மாவட்டத்தில், விடுமுறை நாளில் செயல்பட்ட உணவகங்கள், நிறுவனங்களில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது.

No Holiday -இந்திய திருநாட்டின் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்க்கொடி தலைமையில், தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் நேற்று ஆய்வு நடத்தினர். அதில், 24 கடை மற்றும் நிறுவனங்கள், 51 உணவகங்கள் என, அனுமதி பெறாமல் தொழிலாளரை பணி அமர்த்திய 72 நிறுவனங்கள் சிக்கின. இந்நிறுவன உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள், தெரிவித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 18 Aug 2022 11:16 AM GMT

Related News