/* */

உடுமலை, சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடின

ஊரடங்கு காரணமாக உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலை, சுற்று வட்டார பகுதிகள் வெறிச்சோடின
X

ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் உடுமலை பேருந்து நிலையம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமாக பரவ துவங்கி உள்ளது. இதேபோல் திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தடுப்பு நடவடிக்கையில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொது ஊரடங்கையொட்டி உடுமலை பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படவில்லை.

அதேபோல், உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி, அமாவாசை, பிரதோஷம், ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஊடரங்கு காரணமாக பக்தர்கள் வருகையின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 25 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்