Begin typing your search above and press return to search.
உடுமலையில் பன்றி வளர்க்க தடை
உடுமலை நகராட்சி பகுதியில் பொது இடங்களில் பன்றி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட காந்திசவுக், வள்ளியம்மாள் காலனி உள்ளிட்ட சில இடங்களில் பலர் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா உள்ளிட்ட இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தென்படுவதாலும், வட கிழக்குப்பருவ மழையால், பல்வேறு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், பொது இடங்களில் பன்றி வளர்க்க தடை விதித்து, உடுமலை நகராட்சி ஊழியர்கள், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து வருகின்றனர்.