/* */

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது காட்டாறு வெள்ளம்

உடுமலையில் உள்ள பிரசித்த பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில், காட்டாற்று வெள்ளத்தால் சூழப்பட்டது.

HIGHLIGHTS

அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்தது காட்டாறு வெள்ளம்
X

உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், காட்டாற்று வெள்ளத்தால் சூழப்பட்டது .

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள திருமூர்த்தி மலை, பஞ்சலிங்க அருவியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான குழிப்பட்டி, குருமலை, ஜல்லி முத்தான் பாறை உள்ளிட்ட பல இடங்களில், இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், பஞ்சலிங்க அருவியில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்தது.

இதனால், காலையில் நடைபெற இருந்த பூஜைகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் படி, ஒலிபெருக்கி மூலம், காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 5 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....