/* */

போடிபட்டி ஊராட்சிப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

உடுமலை அருகே போடிபட்டி ஊராட்சி பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

போடிபட்டி ஊராட்சிப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு
X

போடிபட்டி பள்ளியில் நடந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

உடுமலை, போடிபட்டி ஊராட்சியில், ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த சிறுதானிய உணவுகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், முதியோர் நலன் சார்ந்த மருத்துவ குறிப்புகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, உதவி திட்ட அலுவலர் நாகராஜ், தலைமை வகித்தார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்டிருந்த, ஊட்டச்சத்துமிக்க பல்வேறு வகை சிறுதானிய உணவுகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு உணவிலும் என்னென்ன வகை ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன என்பது குறித்த விவரமும் இடம் பெற்றிருந்தது. ஊராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 28 Feb 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  6. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  7. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை