உடுமையில் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கல்

உடுமையில் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி  ரசீது வழங்கல்
X

உடுமலையில்,  கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, பயிர்க்கடன் ரசீது வழங்கப்பட்டது 

உடுமலைபேட்டையில், கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எலையமுத்தூர் ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், பயிர்க் கடன்களுக்கான தள்ளுபடி ரசீது வழங்கப்பபட்டது.

இதில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இரா. ஜெயராமகிருஷ்ணன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கு. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, ரசீதுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி