/* */

உடுமலை பகுதியில் மீண்டும் கீரை சாகுபடி: விவசாயிகள் தீவிரம்

கீரை உற்பத்தியை அதிகரிக்க, கிளுவங்காட்டூர் விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

உடுமலை பகுதியில் மீண்டும் கீரை சாகுபடி: விவசாயிகள் தீவிரம்
X

கிளுவங்காட்டூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கீரைகள்.

கீரை உற்பத்தியை அதிகரிக்க, கிளுவங்காட்டூர் விவசாயிகள் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள கிளுவங்காட்டூரில் ஆண்டு முழுவதும், சுழற்சி முறையில், கீரை செய்யப்படுவது வழக்கம். அப்பகுதி விவசாயிகள், குறைந்த பரப்பில், சுழற்சி முறையில் கீரை வகைகளை பயிரிட்டு பராமரிக்கின்றனர். உடுமலை உழவர் சந்தையில், கிளுவங்காட்டூரில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் கீரை ரகங்களே பிரதான இடம் பிடிக்கின்றன.

குறிப்பாக, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக்கீரை, மணத்தக்காளி உட்பட கீரைகளை பிரதானமாக சாகுபடி செய்கின்றனர். குறைந்த தண்ணீர், பராமரிப்பு மட்டுமே தேவையுள்ளதால், சிறு, குறு விவசாயிகளுக்கு இச்சாகுபடி நிரந்தர வருவாய் அளித்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை சீசனில், போதிய இடைவெளி விட்டு, ஒரு மாதத்துக்கும் அதிகமாக மழை நீடித்தது. இதனால், கீரை சாகுபடிக்கான நாற்றுகளை உற்பத்தி செய்வதிலும், பராமரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. அதிக ஈரம் காரணமாக, சாகுபடியை கைவிடும் நிலை உருவானது.

தற்போது மழை இடைவெளி விட்டுள்ளதால், மீண்டும் கீரை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் வாரங்களில், உடுமலை உழவர் சந்தைக்கு வழக்கம் போல் கீரை வரத்து இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 7 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்