Begin typing your search above and press return to search.
உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் என்.எஸ்.எஸ். விழா
உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் என்.சி.சி., தின விழா நடைபெற்றது.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், உடுமலை வித்யாசாகர் கல்லுாரியில் 73ம் ஆண்டு என். சி. சி.. தின விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் பிரபாகர், தலைமை வகித்தார். கல்லூரி செயலர் பத்மாவதி, நிர்வாக அறங்காவலர் விக்ரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணுவத்தின் பெருமை, நாட்டின் முன்னேற்றத்தில் என்.சி.சி., மாணவர்களின் பங்களிப்பு குறித்து, என். சி. சி., அதிகாரி பிரகாஷ் பேசினார். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி இடம் பெற்றது. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.