/* */

மழைக்கு வீணான பயிர்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு

உடுமலையில், மழைக்கு சேதமான பயிர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

HIGHLIGHTS

மழைக்கு வீணான பயிர்: நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பு
X

உடுமலையில், மழைக்கு சாய்ந்துள்ள சோளப்பயிர். 

திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியில், தொடர் மழை பெய்து வருகிறது. பி.ஏ.பி., நான்காம் பாசனம் மற்றும் மானாவாரியாக, பல ஆயிரம் ஏக்கரில் சோளம் உள்ளிட்ட காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் மழையால், பல இடங்களில், பல ஏக்கர் பரப்பளவிலான சோளம் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாய்ந்து, சேதமடைந்தன.

மழையால், காய்கறி மற்றும் சோளப்பயிர் உள்ளிட்டவை, அறுவடை சமயத்தில் அடியோடு சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, வருவாய் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறையினர், உரிய கள ஆய்வு மேற்கொண்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Updated On: 9 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி