/* */

காெராேனாவுக்கு பிறகு கோவை, மதுரை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்

கொரோனா பரவலால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை மீண்டும் துவங்க உள்ளது.

HIGHLIGHTS

கொரோனா பரவலால், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் சேவை, மீண்டும் துவங்க உள்ளது.

கோவை – பொள்ளாச்சி, பொள்ளாச்சி – கோவை, கோவை – மதுரை, மதுரை - கோவை இடையேயான தினசரி பயணிகள் ரயில் சேவை, கொரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீண்டும் துவங்க உள்ளது. இதனால், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பழனி சுற்றுவட்டார பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை – மதுரை இடையேயான பயணிகள் ரயில், வரும், 10ம் தேதி துவங்க உள்ளது. மதுரை – கோவை இடையேயான பயணிகள் ரயில், வருகிற,11ம் தேதி துவங்க உள்ளது. கோவை – பொள்ளாச்சி ரயில் சேவை, 13ம் தேதியும், பொள்ளாச்சி – கோவை ரயில் சேவை, வரும், 14ம் தேதியும் துவங்க உள்ளது.

கோவையில் இருந்து, பிற்பகல், 2:00 மணியளவில் புறப்படும் கோவை – மதுரை பயணிகள் ரயில், போத்தனூர், கிணத்துக்கடவு, கோமங்கலம், உடுமலை, மைவாடி ரோடு, புஷ்பத்தூர் ஆகிய ஸ்டே ஷன்களில் நின்று மாலை, 4.40 மணிக்கு பழனியை சென்றடையும். அங்கிருந்து, மதுரைக்கு செல்லும். இது, தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது.

பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுவதால் கல்லூரி மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Updated On: 10 Nov 2021 9:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு