/* */

உடுமலை அருகே ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நள்ளிரவில் ஏடிஎம்., மையத்தை உடைத்து, பணம் திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

உடுமலை அருகே ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி
X

உடுமலையில், ஏடிஎம் மையத்தை உடைத்து, பணம் திருட முயன்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஏரிபாளையம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே, பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்., மையம் உள்ளது. நள்ளிரவில், முகமூடி அணிந்த நபர் உள்ளே நுழைந்து, இயந்திரத்தை உடைத்து, பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.

அங்குள்ள சிசிடிவி கேமராவில், தனது முகம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, கேமாரவை தனது லுங்கி மற்றும் அட்டை பெட்டியால் மூடி வைத்துவிட்டு, திருட முயற்சித்துள்ளார். இருப்பினும், இயந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இக்காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. புகாரின் பேரில், உடுமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 29 Oct 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு