/* */

தன்னார்வ அமைப்பினர் சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலஉதவி வழங்கல்

உடுமலையில், தன்னார்வ அமைப்பினர் சார்பில், மலைவாழ் மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

தன்னார்வ அமைப்பினர் சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலஉதவி வழங்கல்
X

உடுமலையில், தன்னார்வ அமைப்பினர் சார்பில் மலைவாழ் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள 'துளிர்' அறக்கட்டளை, ஆண்டுதோறும் தீபாவளியின் போது ஏழைகளுக்கு நல்த்திட்ட உதவி செய்து வருகிறது. அவ்வகையில் இந்தாண்டு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கியது.

உடுமலை பகுதியில் உள்ள குழிப்பட்டி, மாவடைப்பு உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகளை வழங்கி, அவர்களை மகிழ்வித்தனர். மேலும், அவர்களின் கோரிக்கை, தேவைகளை கேட்டறிந்து, வரும் நாட்களில் அவற்றை பூர்த்தி செய்து கொடுப்பதாக, நம்பிக்கை தெரிவித்தனர்.

Updated On: 5 Nov 2021 3:00 AM GMT

Related News