/* */

பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேர மின்சாரம்- முதல்வர்

பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேர மின்சாரம்- முதல்வர்
X

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாய பயன்பாட்டு பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, குடிமராமத்து பணியை பற்றி குறைகூறும் கனிமொழிக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பினார். சென்னையில் வசிப்பவருக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது.பம்பு செட்டுகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றார் .பல்லடத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், மேடை போட்டு, மைக் பிடித்து நேருக்கு நேர் வந்து குற்றச்சாட்டு வைத்தால், மு.க.ஸ்டாலினுக்கு தான் பதில் சொல்ல தயார்.மகளிர் சுய உதவி குழுவின் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதலமைச்சருக்கு, நடனமாடி வரவேற்பு அளிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் மகளிர் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை முதலமைச்சர் பட்டிலிட்டுப் பேசினார்.

Updated On: 13 Feb 2021 4:51 AM GMT

Related News