/* */

அவினாசி, தாராபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்டம் அவினாசி மற்றும் தாராபுரம் மின்பகிர்மான வட்டத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

அவினாசி, தாராபுரத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
X

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின், அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் வௌியிட்டுள்ள தகவலில், அவினாசி மின்வாரிய அலுவலகத்தில் வரும் 8ம் தேதி (நாளை) காலை 11:00 மணியளவில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை 8ம் தேதி, காலை 11:00 மணிக்கு, தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தீர்வு பெறலாம் என்று, தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பாலன் தெரிவித்துள்ளார்.

Updated On: 7 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!