பீக் ஹவர்ஸ்; திருப்பூரில் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை

பீக் ஹவர்ஸ்; திருப்பூரில் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை
X

tirupur News, tirupur News today-  போலீசார் வைத்துள்ள அறிவிப்பு. 

tirupur News, tirupur News today- திருப்பூர் மாநகர பகுதிக்குள் காலை 8 மணி முதல், பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல், இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

tirupur News, tirupur News today- திருப்பூர் - அவிநாசி சாலையில், வாகன போக்கு வரத்து பல மடங்கு அதிகரித்துவிட்டது. அதற்கேற்ப சாலை கட்டமைப்பு இருந்தாலும், சாலையோர ஆக்கிரமிப்புகள், இடையூறுகளால் சாலை முழுக்க பயன்பாட்டில் இல்லை. இச்சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் பயணிக்கின்றன. ஆங்காங்கே பஸ் நிறுத்தம் உள்ள நிலையில் அங்கு பஸ் போகவும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் ஓட்டுனர்கள் பலர், அங்கு பஸ்களை நிறுத்தாமல் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இத்தகைய பிரச்னையை தவிர்க்க, நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தங்களில் சாலையோரம் மட்டுமே பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் வகையில் ‘பஸ் பே’ என்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. சாலையில் வரும் பஸ்கள், பஸ் பேவுக்குள் நின்று தான் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். இதன் மூலம் பஸ்சை பின் தொடர்ந்து வரும் வாகனங்கள் தடையின்றி சாலையை கடந்துவிடும். போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்.

திருப்பூர் புஷ்பா பகுதியில் போலீசார் சார்பில், பஸ் பே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பல பஸ் ஓட்டுனர்கள் இந்த நடைமுறையை பின்பற்றாததால் வாகன நெரிசல் தொடர்கதையாகிறது.பஸ் ஓட்டுனர்கள், இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாநகரத்திற்குள் கனரக வாகனங்கள் எல்லா நேரமும் வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும். வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமலும், சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கனரக வாகனங்கள் அனைத்து பகுதிகளிலும் அனைத்து நேரங்களிலும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்து பலமுறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்பொழுது தான் அதற்கான நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ளார்கள். வீரபாண்டி பிரிவு செக்போஸ்ட் அருகே கனரக வாகனங்கள் காலை 8 மணி முதல் 12 மணிவரையும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைய தடைவித்து அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிவிப்பு பதாகை கீழே இருப்பதால் கனரக வாகனங்களில் வருபவர்களுக்கு தெரியவில்லை. எனவே கனரக வாகன ஓட்டிகளுக்கு தெரியும்படி அறிவிப்பு பதாகையை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும் இதனை கடுமையாக கடைபிடித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக மாநகர பகுதிக்குள் கே.எஸ்.சி பள்ளி வீதி, அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, குமரன் ரோடு, நடராஜ் தியேட்டர் ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் கிராஸ் ரோடு, யூனியன் மில் ரோடு, கோர்ட் வீதி உள்ளிட்ட பகுதிகளில், கனரக வாகனங்கள் நுழைந்துகொள்வதால், மணிக்கணக்கில் வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதற்கான மாற்று ஏற்பாடுகளிலும், போலீசார் கவனம் செலுத்த முன்வர வேண்டும் என்பது, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
அடுத்த சில ஆண்டுகளில் AI மூலம் வந்துவரும் அற்புத மாற்றங்கள்!