வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, திருப்பூர் கலெக்டர் அழைப்பு

tirupur News, tirupur News today- திருப்பூரில், வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற, விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் வினீத் அழைப்பு விடுத்துள்ளார். (கோப்பு படம்)
இதுகுறித்து, கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
tirupur News, tirupur News today- திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்து ஒரு ஆண்டு எந்தவித வேலை வாய்ப்பும் கிடைக்காத படித்த, மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு இதுவரை 3 மாதத்திற்கு ஒரு முறை உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இனி மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. பொதுமனுதாரர்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை அதாவது 3 மாதத்துக்கு ஒரு முறை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, மாற்றுத்திறனாளிகளாக இருந்தால் ரூ.600, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600, 12-ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750, பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரிகளுக்கு ரூ.600, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மாத தோறும் கணக்கிட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்குள்ளும், மற்ற வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்திலேயே படித்து முடித்து 15 ஆண்டுகளாக தமிழகத்திலேயே வசிக்க வேண்டும். மனுதாரர் முற்றிலும் வேலை இல்லாதவராக இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ-மாணவிகளாக இருக்கக்கூடாது. மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு பதிவை தொடர்ந்து புதுப்பித்து வர வேண்டும். பொதுமனுதாரர்கள் 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு முடித்து வேலை இல்லாமல் காத்திருப்பவர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். 10-ந் தேதிக்குள் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடத்தப்படும் போட்டி தேர்வுக்கும், இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும் தேர்வு மையங்களுக்கு சென்று வர இந்த தொகை வழங்கப்படுகிறது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் இந்த ஆண்டுக்கான சுய உறுதிமொழி ஆவணத்தை வருகிற 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பில் கூறியுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட மனுதாரர்கள், உரிய முறையில் அதற்கான விண்ணப்பங்களை அளித்து, உதவித்தொகை பெற, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu