/* */

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனர் உறுதி
X

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்ட கிராந்திகுமார்.

திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்த சிவக்குமார், பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். அப்பணியிடத்துக்கு, பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கிராந்திகுமார், நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக கிராந்திகுமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சி பகுதிகளில் பொது மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்றார்.

Updated On: 13 Jun 2021 4:22 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...