Begin typing your search above and press return to search.
திருப்பூர் மாவட்டத்தில் 266 நகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம்
திருப்பூர் மாவட்டத்தில் 266 நகர பஸ்களில் இன்று பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.
HIGHLIGHTS
சட்டசபை தேர்தல் போது, அரசியல் கட்சியினர் வாக்குறுதிகளை அளித்தனர். அதன்படி, திமுக., சார்பில் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும், பால் விலை ரூ.3 குறைக்கப்படும், அங்கன்வாடி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும். பெண்கள் நகர பஸ்களில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தேர்தலில் திமுக.,வெற்றிப்பெற்று, திமுக., தலைவர் ஸ்டாலின் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அதை தொடர்ந்து 5 கோப்பகளை கையெழுத்திட்டார். அதில் ஒன்று, நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்பதாகும். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று 266 நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டனர்.