/* */

பிரதமர் மீது அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக சார்பில் திருப்பூர் போலீசில் புகார் மனு

பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பூர் பாஜக சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பிரதமர் மீது அவதூறு: நடவடிக்கை கோரி பாஜக சார்பில் திருப்பூர் போலீசில் புகார் மனு
X

பிரதமர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருப்பூர் பாஜக  சார்பில், காவல்துறை ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவின் மாவட்ட தலைவர் நரேன் பாபு, வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட தலைவர் சண்முக வடிவேல் ஆகியோர், காவல்துறை ஆணையரிடம் வழங்கிய மனுவில், இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:

மதுரை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணும், அவரது தந்தையும் இணைந்து, பிரதமர் நரேந்திர மோடியை விமர்ச்சிக்கும் வகையில், பதாகையை ஏந்தியபடி சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து, பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வையும், கலவர எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி, கொரானா நோய் தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் சூழலில், அது குறித்து அவதூறு கருத்து தெரிவித்து, பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி தொற்று பரவலுக்கு வழிவகுக்கின்றனர்.

எனவே, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் செயல்படும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 Jun 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்