/* */

கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்

கால் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கால் டாக்ஸி ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் நலச் சங்கத்தின் சார்பில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் கூறுகையில், தமிழகத்தில் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலையை குறைக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்டாக்சி கட்டணத்தை உயர்த்தி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திருப்பூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு இந்தப் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Feb 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...