/* */

ஆயத்த ஆடை துறையை சேவை துறையாக அறிவிக்க கோரிக்கை

ஆயத்த ஆடை துறையை சேவை துறையாக அறிவிக்க கோரிக்கை
X

ஆயத்த ஆடை துறையை சேவை துறையாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசிடம் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏஇபிசி.,தலைவர் சக்திவேல், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

குறு, சிறு, தடுத்தர நிறுவனங்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. இத்தொழில் நிறுவனங்கள் மூலம் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த 1.30 கோடி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கொரோனா 2 வது அலை வீச துவங்கி உள்ளது. கொரோனா பரிசோதனை, தடுப்பூசி போடும் பணிகளை அரசு வேகப்படுத்தி இருப்பது வரவேற்கதக்கது. கொரோனா பாதிப்பில் இருந்து, ஆடை உற்பத்தி துறை தற்போது தான் மீண்டும் துவங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்திய ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர் கிடைத்து வருகிறது. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஆடை உற்பத்தி துறை வீச்சியை சந்திக்கும். அதிகளவில் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலை, அத்தியாவசிய சேவை துறையாக அறிவிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து தடையின்றி இயங்க அனுமதி அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Updated On: 13 April 2021 5:39 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!