/* */

பொறியாளருக்கு கொரோனா: ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூடல்

ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய பொறியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டது.

HIGHLIGHTS

பொறியாளருக்கு  கொரோனா: ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  மூடல்
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மேலும், நாளை முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இறைச்சி கடைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறான நிலையில், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்த பொறியாளருக்கு கடந்த சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால், கொரோனா சோதனை செய்தார். அதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் காரணமாக அலுவலகம் 3 நாட்கள் மூடப்பட்டது. மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதார துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Updated On: 5 May 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்