/* */

எமர்ஜென்சி கால அனுபவங்களை பகிர்ந்த மேகாலயா முன்னாள் ஆளுநர்: திருப்பூரில் பாராட்டு விழா

திருப்பூரில், பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன், நெருக்கடி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

HIGHLIGHTS

எமர்ஜென்சி கால அனுபவங்களை பகிர்ந்த மேகாலயா முன்னாள் ஆளுநர்:  திருப்பூரில் பாராட்டு விழா
X

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில்,எமர்ஜென்சி காலத்தில் திருப்பூரில் இருந்து பங்கேற்ற மூத்த நிர்வாகிகள் கருப்பசாமி மற்றும் பழனிசாமி, சுவாமிநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். 

இந்தியாவில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் வீடியோகான்பரன்ஸ் மூலம் சிறப்பு கூட்டம், மாவட்டத் தலைவர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, மேகாலயா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர், நெருக்கடி கால நினைவுகள், அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, பாஜக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எமர்ஜென்சி காலத்தில் திருப்பூரில் இருந்து பங்கேற்ற மூத்த நிர்வாகிகள் கருப்பசாமி மற்றும் பழனிசாமி, சுவாமிநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர்கள் கே.சி.எம்.பி. சீனிவாசன், கதிர்வேல், மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, இளைஞர் அணியின் மாவட்ட தலைவர் அருண், சமூக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மோதிலால், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் சி.பி. சுப்பிரமணியம் வரவேற்புரை வழங்கினார். மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் நரேன் பாபு நன்றி கூறினார்.

Updated On: 26 Jun 2021 3:19 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!