/* */

திருப்பூரில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் : பொதுமக்களே கவனம் தேவை!

திருப்பூர் நகரில், ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது; அவரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல் :  பொதுமக்களே கவனம் தேவை!
X

சித்தரிக்கப்பட்ட படம்

திருப்பூர், வேலம்பாளையம் அருகே, சோளிபாளையம் கேஆர்சி கீர்த்தனா நகர் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 44 வயது நபருக்கு, காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்டவை இருந்துள்ளது.

தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்குப் பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த நபரின் வீடு தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் பகுதியில் ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது, பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் கவனமுடன், உரிய பாதுகாப்பு வழிமுறை பின்பற்றி இருக்க, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Updated On: 17 Nov 2021 2:09 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    தேனியில் பரவலாக பெய்யும் மழை! அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
  5. தேனி
    திட்டமிட்டே மறைத்த தமிழகஅரசு! பெரியாறு பாசன விவசாயிகள் கொந்தளிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 7 அடி உயர்வு
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வந்தவாசி
    மகளிர் குழு கடன் வாங்கித் தருவதாக கூறி நூதன மோசடி
  9. திருவள்ளூர்
    அரசு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு
  10. போளூர்
    போளூர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ஆய்வு