/* */

மழை பாதிப்பா? நான் இருக்கேன்: உறுதிமொழி தந்து களமிறங்கும் எம்எல்ஏ

திருப்பூரில் மழை பாதிப்பு, கழிவு நீர் பிரச்னை இருந்தால், ஒரு பதிவிட்டாலே போதும், சரி செய்து தருகிறேன் என்று, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் உறுதிமொழி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

மழை பாதிப்பா? நான் இருக்கேன்: உறுதிமொழி தந்து களமிறங்கும் எம்எல்ஏ
X

திருப்பூரில், மாபெரும் தூய்மைப் பணி முகாமின் (Mass Cleaning) போது, கழிவுகளை அகற்றிய எம்.எல்.ஏ. செல்வராஜ்.

திருப்பூரில் மழை பாதிப்பு, கழிவுநீர் பிரச்னை இருந்தால், ஒரு பதிவிட்டாலே போதும் சரி செய்து தருகிறேன் என்று, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்வராஜ் உறுதிமொழி தந்துள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.ஆக இருக்கும் க. செல்வராஜ், மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து, பம்பரமாக சுழன்று செயல்பட்டு தீர்வை தருகிறார். பொதுமக்கள் பிரச்சனைகளை எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக, களத்திலும் சரி, தனது சமூகவலை தளத்திலும் சரி, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவர்.

எம்.எல்.ஏ. செல்வராஜ், தனது பணிகளை புகைப்படங்களாக வெளியிட்டுள்ள பதிவு.

#உங்கள்_குறைகளுக்கு_உடனடி_தீர்வு என்ற ஹேஷ்டே மூலம், தொகுதி பிரச்சனைகளை பதிவிடச் சொல்லி, அதை அன்றாடம் போய் கவனித்து உரிய வழிவகை செய்து தருகிறார். அத்துடன், தொகுதி மக்களால் அவரை எளிதில் நேரடியாக சந்தித்து குறைகளை தெரிவிக்க முடிகிறது. அவற்றை கேட்டு, உரிய அதிகாரிகளிடத்தில் பேசி, தீர்வு காண வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு சமீபத்திய உதாரணமாக, திருப்பூர் காலேஜ் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை, பார் அகற்றியதை சொல்லலாம். 10 ஆண்டுகாலமாக அப்பகுதி மக்கள் போராடியும் பலனில்லை. இந்த சூழலில்தான், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற, எம்.எல்.ஏ. செல்வராஜ் தானே போராட்ட களத்தில் குதித்து, மதுபானக் கடையை அகற்றும் வரை ஓயவில்லை; இறுதியில் டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. இதற்காக, அப்பகுதி பொதுமக்கள், கட்சி வேறுபாடின்றி அவரை பாராட்டி வருகின்றனர்.



தற்போது திருப்பூர் மாவட்டத்திலும், நகரில் மழைப்பொழிவு இருந்து வருகிறது. மழை பாதிப்புகள் ஆங்காங்கே இருந்து வரும் சூழலில், மழை மற்றும் கழிவுநீர் பிரச்சனையை, தனது கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுப்பதாக, க.செல்வராஜ் எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது சமூக வலைதளப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது: திருப்பூர் மக்களே, தொடர் மழையால் உங்கள் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதா? கழிவுநீர் செல்லாமல் சுகாதார பிரச்னையா? உங்கள் பகுதி பிரச்னைகளை #திருப்பூர்_நலன்_காப்போம் என்ற ஹேஷ் டேக்கிலும் பதிவிடலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற உறுதியை அளிக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அணுகுமுறை, தொகுதி மக்களிடம் பாராட்டை பெற்றுத் தந்துள்ளது.

Updated On: 9 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...