/* */

திருப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக மழை: இதமான வானிலையால் மக்கள் நிம்மதி

திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்று மாலையும் மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

திருப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக மழை: இதமான வானிலையால் மக்கள் நிம்மதி
X

கடந்த சில வாரங்களாக, திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. மே மாத அக்னி நட்சத்திர வெயிலுக்கு இணையாக நிலவிய வெப்பத்தால், மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனிடையே, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த இரு தினங்களாக, திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இரு தினங்களாக வெயில் இல்லாமல் மேகமூட்டமாக இருந்து வந்தது. இன்றும் அதேபோன்ற வானிலை நிலவியது. இன்று மாலை, திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து காற்றுடன் மிதமான மழை பெய்தது.

தொடர்ந்து 3 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Updated On: 15 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...