/* */

திருப்பூரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Cell Phone Tower-திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
X

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டனர்.

Cell Phone Tower- திருப்பூர் மாநகராட்சி 3-வது வார்டு செந்தில்நகரில் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டில், தனியார் கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்க பணி நடந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் டவர் அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன், மீண்டும் அதே கட்டிடத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து டவர் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தி, 3-வது வார்டு கவுன்சிலர் லோகநாயகி மற்றும் பொதுமக்கள், திருப்பூர் மேயர் தினேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.

கலெக்டருக்கு, அந்த மனுவை அனுப்பிய நிலையில், செல்போன் டவர் அமைக்கும் பணி நடந்தததால், அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். கவுன்சிலர் தலைமையில் டவர் அமைக்கும் கட்டிடத்தின் முன் திரண்டனர். தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் அங்குவந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இப்பிரச்னை குறித்து, மீண்டும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்களிடம் மனு அளிக்குமாறும், அதுவரை டவர் அமைக்கும் பணி நடக்காது எனவும் போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து, கலைந்து சென்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 30 July 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்