/* */

அதிகாலையில் வாகன விபத்து: திருப்பூரை சேர்ந்த இருவர் பலி

பாலக்காடு அருகே வாளையார் செக்போஸ்டில் நடந்த வாகன விபத்தில், திருப்பூரைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

HIGHLIGHTS

அதிகாலையில் வாகன விபத்து: திருப்பூரை சேர்ந்த இருவர் பலி
X

விபத்தில் நொறுங்கிய கார். 

திருப்பூர் மாவட்டம், கூத்தம்பாளையம் அண்ணாநகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் பாலாஜி (49), முருகேசன் (47). இவர்களது நண்பர் பத்ருதீன் (40), டிரைவர் மைனுதீன் (38) ஆகியோர் திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

வியாபார விஷயமாக திருப்பூர் வந்த வெளிநாட்டினரை, காரில், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, இன்று அதிகாலை, திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர். கோவை பாலக்காடு எல்லையான வாளையாறு செக்போஸ்ட் அருகில் வந்த போது, அதிகாலை 5.45 மணிக்கு எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இன்னோவா கார், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில், பாலாஜி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இறந்தவர்களின் உடல்கள் பாலக்காடு அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On: 31 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?