மரத்தில் மோதியது கார்; டிரைவர் பலி

காங்கயம் அருகில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்.
திருப்பூர் வீரபாண்டி சபாபதிநகரை சேர்ந்தவர் முருகானந்தன் (வயது 66). இவர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று நிறுவனத்தின் உரிமையாளர் மனைவியை, காரில் கரூருக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, காரில் கரூரில் இருந்து திருப்பூருக்கு வந்தார்.
காங்கயத்தை அடுத்த சிவன்மலை அரசம்பாளையம் பகுதியில் கார் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டோர மரத்தில் வேகமாக மோதியது. இதில் முருகானந்தம் காருக்குள் சிக்கிக்கொண்டார். தகவல் அறிந்த காங்கயம் தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு சென்று முருகானந்தத்தை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகானந்தத்தை பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu