அண்ணனை கொலை செய்த 'பாசக்கார' தம்பி
Today Murder News -அவிநாசி அருகே, சொத்து தகராறில் அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
Today Murder News -திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, வேலூர் கருக்கன்காட்டு தோட்டத்தை சேர்ந்த கனகராஜ் மகன் கனகசபாபதி (27). இவரது தம்பி கவியரசு (24). இவர்கள் இருவரும் விவசாய தொழிலாளர்கள். இருவருக்கும் இடையே பூர்வீக சொத்து குறித்த அடிக்கடி தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு, கவியரசு மற்றும் அவரது நண்பர்கள் நவீன், மூர்த்தி ஆகியோர் கனகசபாபதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டின் கதவு மற்றும் வீட்டை சேதப்படுத்தினர். பின், வீட்டிற்குள் இருந்த கனகசபாபதியை வெளியே இழுத்து வந்து கட்டை மற்றும் கம்பியால் தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த கனகசபாபதி, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி கனகசபாபதி உயிரிழந்தார். இதுகுறித்து கனகசபாபதியின் மனைவி இந்துமதி கொடுத்த புகாரின்பேரில் அவிநாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவியரசு மற்றும் நவீன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். சொத்துக்காக தம்பியே, அண்ணனை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2