/* */

திருப்பூரில் இவிஎம் இயந்திரங்கள் உள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு

Tirupur News- திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் இவிஎம் இயந்திரங்கள் உள்ள  ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு
X

Tirupur News- திருப்பூரில் ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானது. 

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. கல்லூரியில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

துணை ராணுவத்தினர், போலீஸார் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்சி முகவர்கள் கண்காணிப்பு அறை முன்பு ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் காலை 8 மணிக்கு செல்லும் கட்சியினர் மாலை 4 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு செல்பவர்கள் இரவு 10 மணி வரையிலும், இரவு 10 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் மறுநாள் காலை 8 மணி வரையிலும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூம்கள் சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் ஒருங்கிணைந்து கண்காணிக்க பாதுகாப்பு பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென அந்தியூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளின் ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திடீரென பழுதடைந்தன. இதையடுத்து அரசியல் கட்சியினர் ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கேமராக்கள் தெரியவில்லை.

தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகள் குழுவினர், உடனடியாக விரைந்து பழுதடைந்த கேமராக்களை சுமார் அரை மணி நேரத்தில் சீரமைத்தனர். இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 22 April 2024 5:12 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  2. வழிகாட்டி
    தோனி, ரெய்னா,ஜஸ்பிரீத் பும்ரா - யார் உயர்ந்த மனிதர்..?...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே கன மழையால் கோவில் மீது சாய்ந்த 100 ஆண்டு பழமையான...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த மழையால் மகிழ்ச்சியில் பொது மக்கள்
  5. ஈரோடு
    பேருந்திலிருந்து முதியவரை தள்ளிவிட்ட விவகாரம்: ஓட்டுநர் - நடத்துநர்...
  6. ஈரோடு
    கொடிவேரி தடுப்பணையில் ஆகாய தாமரை செடிகளால் சுற்றுலாப் பயணிகள் அவதி
  7. ஈரோடு
    ஈரோட்டில் வருகிற 19 ம்தேதி மின்வாரிய ஓய்வூதியர் குறை தீர்க்கும்...
  8. ஈரோடு
    பவானியில் ஒரு பெண்ணை இருவர் காதலித்த தகராறில் முன்னாள் காதலன் குத்தி...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா