திருப்பூரில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பூரில் நாளை தடுப்பூசி சிறப்பு முகாம்

திருப்பூரில் நாளை, 1,341 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

Free Vaccination Camp -திருப்பூர் மாவட்டத்தில், 1,341 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், நாளை நடக்கிறது.

Free Vaccination Camp -திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 98.92 சதவீதம் பேர் முதல் தவணையும், 79.06 சதவீதம் பேர் 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுபோல் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.64 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.18 சதவீதம் பேர் 2-வது தவணையும் செலுத்தியுள்ளனர்.

12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.44 சதவீதம் பேர் முதல் தவணையும், 66.84 சதவீதம் பேர் இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியானது 2-வது தவணை செலுத்திய 6 மாதம் ஆன 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக வரும் 30-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் 1,341 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், சுங்கச்சாவடி, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 2,681 பேர் இந்த பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story