கொப்பரை கொள்முதல்; அக். 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை கொள்முதல், அக்டோபர் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Coconut Price -இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் வினீத் கூறியிருப்பதாவது:
விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட அரவை தேங்காய் கொப்பரை கிலோ ரூ.105.90-க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ.110-க்கும், மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை 3 ஆயிரத்து 498 விவசாயிகளிடம் இருந்து ரூ.45 கோடியே 37 லட்சத்தில் கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 30-ம் தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்ய காலநீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டது. அதன்படி பொங்கலூர், காங்கயம், பெதப்பம்பட்டி, உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரும் அக்டோபர் மாதம் 31-ம் தேதி வரை, கொப்பரை கொள்முதல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள், நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விவரங்களுடன், தங்கள் பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பொங்கலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை 99424 20525 என்ற எண்ணிலும், காங்கயத்தை 63835 96209 என்ற எண்ணிலும், பெதப்பம்பட்டியை 97109 21187 என்ற எண்ணிலும், உடுமலையை 99409 19150 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். தென்னை விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu