பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் திடீர் ஸ்டிரைக்

பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் திடீர் ஸ்டிரைக்

பைல் படம்.

அங்கேரிபாளையத்தை சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனமோ இன்னும் முதல் ஆண்டுக்கான 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

சைமா மற்றும் பவர்டேபிள் உரிமையாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த 2022 ஜூனில் கட்டண உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்தாகி 9 மாதமான நிலையில் அங்கேரிபாளையத்தை சேர்ந்த, ஆடை உற்பத்தி நிறுவனமோ இன்னும் முதல் ஆண்டுக்கான 14 சதவீத தையல் கட்டண உயர்வு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதனால் அந்நிறுவனத்துக்கு ஆடை தைத்துக்கொடுப்பதை நிறுத்தி காலவரையற்ற உற்பத்தி நிறுத்தத்தை தொடங்கி உள்ளது பவர்டேபிள் உரிமையாளர் சங்கம். இதுகுறித்து பவர்டேபிள் உரிமையாளர் சங்க நிர்வாகி கூறியதாவது:

அங்கேரிபாளையத்தில் இயங்கும் ஆடை உற்பத்தி நிறுவனத்துக்கு திருப்பூர், மணப்பாறை, குளித்தலை, புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பவர்டேபிள் நிறுவனங்கள் ஆடை தைத்து கொடுக்கின்றன. மூலப்பொருள் விலை உயர்வு, எரிபொருள், மின் கட்டணம் உயர்வால் பவர்டேபிள் நிறுவனங்கள் பரிதவிக்கின்றன. மற்ற நிறுவனங்களெல்லாம், ஒப்பந்தப்படி கட்டண உயர்வு வழங்குகின்றன.

அங்கேரிபாளையத்தை சேர்ந்த ஆடை நிறுவனம் மட்டும் தையல் கட்டண உயர்வு அளிக்காமல் இழுத்தடிக்கிறது. இதுகுறித்து 'சைமா' சங்கத்துக்கு மனு அனுப்பினோம். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த ஒரு நிறுவனத்துக்கான ஆடை தயாரிப்பை முழுமையாக நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தை துவக்கியுள்ளோம். 'சைமா' சங்கம் தலையிட்டு பேச்சு நடத்தி கட்டண உயர்வை பெற்றுத்தர வேண்டும். அதுவரை உற்பத்தி நிறுத்தம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story